விவசாயிகளின் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், திரும்பப் பெறப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார் ராகேஷ் திகாயத்.! 

0 2798

விவசாயிகளின் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், திரும்பப் பெறப்படவில்லை என்றும் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொண்டதையடுத்து ஓராண்டாக நடைபெற்று வந்த போராட்டத்தைக் கைவிட்டு விவசாயிகள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.

டெல்லி - உத்தரப்பிரதேச எல்லையில் கவுசாம்பி என்னுமிடத்தில் விவசாயிகளின் கடைசி அணியினரும் இன்று போராட்டக் களத்தைக் காலி செய்துவிட்டுப் புறப்பட்டனர். அப்போது அவர்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

போராட்டக் காலத்தில் உணவு, அடிப்படைத் தேவைப் பொருட்கள் வழங்கியோருக்கு விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் நன்றி தெரிவித்தார். புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்ற பிறகும் மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments